பிள்ளை வயல் காளியம்மன் கோவிலில் பூச்செரிதல் விழா துவக்கம்

பிரசித்தி பெற்ற பிள்ளை வயல் காளியம்மன் கோவிலில் பூச்செரிதல் விழா தொடங்கப்பட்டது.

Update: 2024-06-22 15:51 GMT

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி

சிவகங்கை நகரில் ஆண்டுதோறும் பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடைபெறும். இந்த ஆண்டு ஜூலை 5 ம் தேதி காலை கொடியேற்றம், மாலை காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா துவங்குகிறது. தினமும் பிள்ளைவயல் காளியம்மன் பல்வேறு அலங்காரங்களில் மாலையில் எழுந்தருள்வார்.

ஹிந்து அறநிலையத்துறை சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான பூச்சொரிதல் விழா ஜூலை 12 அன்று வெள்ளிக்கிழமை நடைபெறும். அன்றைய தினம் நகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். இரவு கலைநிகழ்ச்சி நடைபெறும். ஜூலை 12 அன்றுகாலையில் இருந்து இரவு முழுவதும் பெண்கள் பூத்தட்டுக்களைஏந்தி,

ஊர்வலமாக பிள்ளைவயல் காளி கோயிலுக்கு வருவார்கள். அங்கு அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறும். விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து நேர்த்தி செலுத்துவர். விழா ஏற்பாட்டை ஹிந்து அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News