சம்பா பருவத்தில் நெல் அரவைக்கு அனுப்பும் பணி தொடக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட சம்பா அறுவடை பணி முடிவடைந்தத நிலையில் அரவைக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.

Update: 2024-02-01 11:14 GMT

சம்பா பயிர் அறுவடை 

திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாம் பருவமாக சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டு அறுவடை நடைபெற்று வருகிறது . சில இடங்களில் அறுவடைமுடிவடைந்துவிட்டது. அறுவடை ஆன நெல்லை கொள்முதல் செய்ய தமிழக அரசு ஆங்காங்கே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது.

விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கின்றனர். கொள்முதல் செய்த நெல் அரவைக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியும் தற்போது தொடங்கியுள்ளது.

Tags:    

Similar News