இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீர் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் வைத்திருந்த போஸ்டர் கிழிக்கப்படிருந்தாதால் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2024-01-08 03:11 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ,ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபம் பகுதியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வருகின்ற 10.01.2024 புதன்கிழமை காலை 10 மணி அளவில் இந்தியா ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநாடு நடைபெறுவதற்காக பேனர் வைக்கப்பட்ட நிலையில் அதே தேதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் வருகையை குறித்து ஊத்தங்கரை பகுதியில் வைக்கப்பட்ட பல்வேறு விளம்பர பதில்கள் உடனடியாக அகற்ற வேண்டும் என காவல்துறை சார்பில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டனர். 

எடுக்க மறுத்த நிலையில் பேரூராட்சி திருமண மண்டபம் பகுதியில் பேனர் பிளேடால் கிழிக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நபர்கள் அதே பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது இதில். மாநில செயற்குழு உறுப்பினர் பி. முருகேசன்,தொகுதி செயலாளர் ஜி துரை, துணைச் செயலாளர் மாயக்கண்ணன்,அலுவலகப் பொறுப்பாளர் தங்கம்,நகர செயலாளர் வெங்கடேசன்,பொருளாளர் கார்த்திகேயன் உள்பட பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News