சமுதாய வளைகாப்பு விழா
பழனியில் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பாக சமுதாய வளைகாப்பு நடந்தது.
Update: 2024-01-04 07:35 GMT
பழனியில் சமுதாய வளைகாப்பு நடந்தது . திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தனியார் திருமண மண்டபத்தில் சமூகநலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பாக நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடந்தது .பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர், மக்கள் பிரதிநிதிகள், துறை சார்ந்த அதிகாரிகள், கர்ப்பிணி தாய்மார்கள், பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.