பண்ருட்டியில் சமுதாய வளையகாப்பு விழா

பண்ருட்டியில் நடைபெற்ற சமுதாய வளையகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-01-28 04:31 GMT

சமுதாய வளைகாப்பு

கடலூர் மேற்கு மாவட்டம், பண்ருட்டி சட்டமன்ற தொகுதி, KSR சக்கரபாணி செட்டியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் ஆணைக்கினங்க 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளையகாப்பு விழா தமிழ்நாடு தொழிலாளர்கள் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் அறிவுறுத்தலுக்கு இணங்க பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் ஆலோசனையின் பேரில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணாகிராமம் ஒன்றிய கழக செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், வேளாண்மை ஆத்மா குழு தலைவர் வி. கே. வெங்கட்ராமன் அரசு பெண்களுக்கு செய்துள்ள சாதனைகளைப் பற்றி எடுத்துரைத்து பெண்கள் அனைவரும் திமுக அரசிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று உரையாற்றினார்.

Tags:    

Similar News