பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து புகார்

சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து புகார் தெரிவிக்கலாம் - மாவட்ட ஆட்சியர்

Update: 2024-01-09 10:01 GMT

சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து புகார் தெரிவிக்கலாம் - மாவட்ட ஆட்சியர்

சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக புகார் இருப்பின், கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 829 ரேஷன் கடைகள் மூலம் ஜன., 10 முதல் அரிசி வாங்கும் கார்டுதாரர்களுக்கு தலா ஒரு கிலோ சர்க்கரை, பச்சரிசி, ரூ.1000 ரொக்கம், வேட்டிசேலை வழங்கப்பட உள்ளது. ஜன., 9 வரை அந்தந்த ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக புகார் இருந்தால், பொதுமக்கள் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 1077 மற்றும் அந்தந்த தாலுகாவில் உள்ள வட்ட வழங்கல் அலுவலருக்கு புகார் தெரிவிக்கலாம், என தெரிவித்துள்ளார்
Tags:    

Similar News