குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் விவசாயியை தாக்கிய மூவர் மீது புகார்

விருதுநகர் மாவட்டம் குருமூர்த்தி நாயக்கன்பட்டி பகுதியில் சுந்தரராஜன் என்பவரை தாக்கிய மூவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-19 12:17 GMT

காவல் நிலையம் 

விருதுநகர் மாவட்டம் குருமூர்த்தி நாயக்கன்பட்டி பகுதியைச் சார்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் அந்த ஊரில் 10 ஏக்கர் நிலம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதில் மாடுகளை வளர்த்து விவசாயம் செய்து பிழைத்து வருவதாகவும், இந்நிலையில் கடந்த 18ம் தேதி அந்த இடத்தில் பாதை சம்பந்தமாக தனியார் பட்டாசு ஆலையின் உரிமையாளர் சரோஜினி என்பவர் இடத்தை அளப்பதற்கு வந்திருந்ததாகவும்,இடத்தை அளப்பதற்கு வந்த அவர்கள் சுந்தரராஜனுக்கு சொந்தமான இடத்தில் நடடப்பட்டிருந்த கல்லை எடுக்க முயற்சித்ததாகவும், இதை சுந்தர்ராஜன் தடுத்த போது அருண்குமார் என்பவர் சுந்தர்ராஜனை தாக்கி கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.

அவர் கீழே இருந்து எழுவதற்குள் அருண்குமார் உடன் வந்த பத்மநாபன் மற்றும் பிரித்திவிராஜ் ஆகிய மூவரும் இணைந்து கொண்டு சுந்தர்ராஜன் தாக்கி காயப்படுத்தி உள்ளனர் மேலும் சுதராஜன் இடத்தில் இருந்த கல்லை எடுத்து எறிந்து விட்டு கொலை மிரட்டல் மட்டும் சென்றதாக கூறப்படுகிறது.

இதுவரை நடவடிக்கை எடுக்க கோரி சுந்தர்ராஜன் ஆபத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இந்த புகாரின் அடிப்படையில் ஆபத்துக்காவல் எப்படி சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News