மறைந்த கம்யூ.,தலைவர் சங்கரய்யாவுக்கு ராணிப்பேட்டையில் இரங்கல் ஊர்வலம்
Update: 2023-11-17 05:23 GMT
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவின் மறைவையொட்டி செங்கொடி அஞ்சலி ஊர்வலம் நடந்தது. சங்கரய்யா திருவுருவப்படத்தை கையில் ஏந்தியபடி ராஜேஸ்வரி திரையரங்கில் இருந்து முக்கிய தெருக்களின் வழியாக ஊர்வலமாக முத்துக்கடை பேருந்து நிலையம் வரை ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அவரது திருவுருவ படத்துக்கு மலர்கள் தூவி ,மௌன அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.