நவராத்திரி விழா

ஆரணி, அக் 5. ஆரணி பகுதியில் உள்ள கோயில்களில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது

Update: 2024-10-05 17:32 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆரணி கொசப்பாளையம் ஸ்ரீ பாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீ தர்மராஜா கோயிலில் நவராத்திரி விழா 3வது நாள் முன்னிட்டு சனிக்கிழமை சுவாமிக்கு ஸ்ரீ அன்னபூரணி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கோயில் நிர்வாக தலைவர் ரேணுகாகங்காதரன், ஸ்ரீ கோகுல்சில்க்ஸ் உரிமையாளர் ஜி.ஏ.கோகுலகிருஷ்ணன், ஏ.ஜி.சில்க்ஸ் உரிமையாளர் ஜி.ஏ.கணேசன், அதிமுக நகரசெயலாளர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் ஆரணி பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ அரியாத்தம்மன் ஆலய்ததில் நவராத்திரி 3வது நாள் விழா முன்னிட்டு சுவாமிக்கு சிவலிங்க பூஜை செய்யும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Similar News