பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தீயில் எறிந்து நாசம்!

கனகம்மாசத்திரம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பறிமுதல் வாகனங்கள் தீயில் எறிந்து நாசம்.

Update: 2024-02-07 10:31 GMT

தீயில் எறிந்த வாகனங்கள்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்டது  கனகம்மாசத்திரம். இங்கு பஜாரில் பழைய காவல் நிலைய கட்டடம்  அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் வழக்குகள் பதியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 1500க்கும் மேற்பட்ட இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் தேங்கி உள்ளன. இந்த பகுதியில் அமர்ந்து இரவு நேரங்களில் குடிமகன்கள் குடித்து விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிக்க வந்த அடையாளம் தெரியாத நபர்கள் குளிர்காய புங்க மரத்தின் குப்பைகளை கொளுத்தி உள்ளனர்.  பின்னர் தீ மெல்ல பரவி பழைய காவல் நிலைய வளாகத்தில் இருந்த  வாகனத்தில் தீப்பற்றியது.  இதில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. சம்பவம் குறித்து அறிந்து விரைந்த திருத்தணி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கெண்டு வந்தனர். பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News