மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்

ஆரணி அருகே மணல் கடத்திய மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-30 03:41 GMT

ஆரணி அருகே மணல் கடத்திய மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் அருண்குமார் மற்றும் போலீசார் குன்னத்தூர் கமண்டல நாக நதி ஆற்றங்கரை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தவர்கள் போலீசாரை கண்டதும் மாட்டு வண்டிகளை நடுரோட்டிலேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து போலீசார் 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News