தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-01-23 15:35 GMT

பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகள்

அரகண்டநல்லுார் அடுத்த வீரசோழபுரம் தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அரகண்டநல்லுார் சப் இன்ஸ்பெக்டர் ராஜமன்னார் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மணல் ஏற்றிச் சென்ற 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, வீரசோழபுரம் ஞானவேல், ராமதாஸ்,ராஜி, ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, ஞானவேலை கைது செய்தனர். தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News