தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி பேரூராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Update: 2024-05-31 11:26 GMT
சிவகிரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவின்பேரில், திருநெல்வேலி மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் சசிதீபா அறிவுறுத்தலின்படி, சிவகிரி பேரூராட்சி அலுவலா் வெங்கடகோபு , வாசுதேவநல்லூா் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் வெங்கடேசன் ஆகியோா் சிவகிரி பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.

இதில், மருதகிழவன் கோயில் தெருவை சோ்ந்த ராமச்சந்திரன் மகன் பொன் இருளாண்டி, பஜனைமடம் தெருவை சோ்ந்த ஜெயராம் மகன் காளை பாண்டியன் ஆகியோரது கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். சுகாதார ஆய்வாளா் லாசா் எட்வின் ராஜாசிங், சுகாதார மேற்பாா்வையாளா்கள் குமாா், இசக்கி உடன் சென்றனா்.

Tags:    

Similar News