காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்பாளர் தாக்கல் செய்தார்.

Update: 2024-03-27 17:18 GMT

வேட்புமனு தாக்கல்

இந்தியாவின் 18-வது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ள தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கிறது. விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவரம் அந்த தொகுதியில் நான்கு பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.காங்கிரஸ் கட்சி, நாம் தமிழர்,பாஜக,அதிமுக வேட்பாளர்கள் உள்ளனர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தாரகை கத்பட் இன்று உலகம் கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் பிணு லால் சிங் உட்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News