மதமாற்றத்தை ஊக்குவிக்க காங்கிரஸ் சதி - எச்.ராஜா

நாட்டு மக்களின் சொத்துகளை அபகரித்து சிறுபான்மையினருக்கு கொடுத்து மதமாற்றத்தை ஊக்குவிக்க காங்கிரஸ் சதி செய்கிறது. பிரதமர் மோடி முஸ்லிம்கள் குறித்து பேசவில்லை. ஊடுருவலர்கள் குறித்து தான் பேசினார் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.

Update: 2024-04-30 04:09 GMT

எச்.ராஜா 

சேலத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- நடந்து முடிந்த 2 கட்ட நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும். எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இன்னும் 40 நாட்களுக்கு கனவில் வாழ்வார்கள். காங்கிரஸ் கட்சி ஆளும் 3 மாநிலத்திலும் குறைந்த நாடாளுமன்ற தொகுதிகளே உள்ளன. நாட்டு மக்களின் சொத்துகளை அபகரித்து சிறுபான்மையினருக்கு கொடுத்து மதமாற்றத்தை ஊக்குவிக்க காங்கிரஸ் சதி செய்கிறது. பிரதமர் மோடி முஸ்லிம்கள் குறித்து பேசவில்லை. ஊடுருவலர்கள் குறித்து தான் பேசினார். மேட்டுபாளையம் வனபத்ர காளியம்மன் கோவிலில் 4 அர்ச்சகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பளம் இல்லாமல் தற்காலிக பணியாளர்களாக உள்ள அவர்கள் தட்டு காசை எடுக்காமல் வாழ்வாதாரத்துக்கு எங்கே போவார்கள். தமிழ்நாடு போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக இருக்க வேண்டும் என்றே தி.மு.க. அரசு விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News