காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நாளை குமரி வருகை

தேர்தல் பரப்புரைக்காக நாளை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கன்னியாகுமரி வரவுள்ளார்.

Update: 2024-04-06 06:59 GMT

செல்வ பெருந்தகை

கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தல் களம் தற்போது மிகவும் பரபரப்பாகி உள்ளது. பாதிய ஜனதா, காங்கிரஸ், அதிமுக , நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நடைபெறும் இந்த தொகுதியில் அனைத்து கட்சியை சேர்ந்த தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.        இந்த நிலையில் நாளை (07-04-2024) மாலை 6 மணிக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வபெருந்தகை எம் எல் ஏ  குமரி பாராளுமன்ற  காங்கிரஸ் வேட்பாளர்  விஜய் வசந்த் - ஐ  ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்ய  நாகர்கோவில் வருகிறார்.  அண்ணா ஸ்டேடியம் அருகே நடைபெறும்  பொது கூட்டத்தில் பேசுவதாக   நாகர்கோவில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
Tags:    

Similar News