காங்கிரஸ் தலைவர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்?

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறதா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Update: 2024-05-10 03:11 GMT

ஜெயக்குமார்

திருநெல்வேலி என்ஜிஓ காலனியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் அருகே அமைந்துள்ள மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று (மே 9) சிபிசிஐடி போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வை தொடர்ந்து இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வழக்கு சிபிசிஐடிக்கு மாறுகிறதா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
Tags:    

Similar News