குழித்துறையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது

குழித்துறையில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-02-28 08:49 GMT

குழித்துறையில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.


தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதை கண்டித்தும்,மத்திய அரசு மீனவர்களை பாதுகாக்க தவறியதை கண்டித்தும்,பிரதமர் மோடியின் தமிழக வருகையை கண்டித்தும் தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பினு லால்சிங் தலைமையில் குழித்துறை சந்திப்பில் ஐஓபி வங்கி முன்பு கருப்புக் கொடி ஏந்தி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Tags:    

Similar News