தமிழக ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தியை இழிவு படுத்தும் வகையில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-28 05:29 GMT

ஆர்ப்பாட்டம் 

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில், ஜனவரி 27ஆம் தேதி பகல் 12 மணியளவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆளுநர் ரவி, தமிழக அரசையும், தேசத்தந்தை மகாத்மா காந்தியையும் இழிவு படுத்தும் வகையில் பேசியதை கண்டித்து, இதற்கு துணை புரியும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷம் இட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News