ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் மகாத்மா காந்தி குறித்த ஆளுநர் ரவியின் அவதூறு பேச்சைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-28 02:57 GMT

ஆர்ப்பாட்டம் 

தேசதந்தை காந்தியடிகளின் விடுதலைப் போராட்ட வரலாற்றை திரித்து பேசும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், இந்திய நீதி யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும்  நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News