குடியாத்தத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாரத் ஜோடா யாத்திரையில் தாக்குதல் நடத்தியவர்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2024-01-24 02:37 GMT

ஆர்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நியாய பாதயாத்திரை மீது , தாக்குதல் நடத்தியதாக பாஜக வினரை கண்டித்தும் அதற்கு துணை போன அசாம் மாநில பாஜக அரசைக் கண்டித்தும் , வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

நிகழ்விற்கு வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் விஜயேந்திரன், காமராஜ், வாசு, சரவணன்,ராகிப், உவைஸ் அஹ்மத், செந்தில் ,ஆனந்தவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர், மாவட்ட துணை தலைவர் சேகரன், மாவட்ட பொதுச் செயலாளர் பாரத் நவீன்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News