மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

மத்திய பாஜக அரசு ஸ்டேட் வங்கியை முறைகேடாக பயன்படுத்துவதை கண்டித்து சுரண்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-08 08:33 GMT
ஆர்ப்பாட்டம் 
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில், மத்திய அரசு ஸ்டேட் வங்கியை முறைகேடாக பயன்படுத்துவதை கண்டித்து நகர தலைவர் ஜெயபால் தலைமையில் கண்டன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ். பழனி எம்எல்ஏ கண்டன உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் முரளிராஜா, சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், மாநில பேச்சாளர் எஸ்ஆர் பால்துரை உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்களும் உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News