நாகர்கோவிலில் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு

காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Update: 2023-12-18 07:10 GMT
நாகர்கோவிலில் காங்கிரஸ் மாநாடு .
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் குமரி மாவட்ட நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு நாகர்கோவிலில் நேற்று மாலை நடந்தது. மாநாட்டிற்கு மாநில தலைவர் அழகிரி தலைமை வைத்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விஜய் வசந்த் எம் பி, துணை ஒருங்கிணைப்பாளர்களான எம்.எல்.ஏக்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், விஜயதரணி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.       மாநாட்டில் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, தேர்தல் என்பது ஒரு போர்க்களம். மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தாலும் 40 சதவீதத்திற்கு மேலான வாக்குகளை நாம் பெற்றுள்ளோம். தேர்தல் கமிஷன், அமலாக்கத்துறை, நீதித்துறை, சிபிஐ உள்ளிட்ட துறைகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஆனால் அவற்றை ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கேள்வி கேட்கும் எதிர்கட்சிகளை மிரட்டி வருகிறது என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளம் பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் தொகுத்து வழங்கினார்.
Tags:    

Similar News