எஸ்பிஐ வங்கியை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி அருகே தேர்தல் பத்திர ஊழலை வெளியிட மறுக்கும் பாரத் ஸ்டேட் வங்கி நிர்வாகத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-08 05:04 GMT

ஆர்ப்பாட்டம் 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பாரத் ஸ்டேட் பேங்க் வங்கி முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஆனந்தன் ஆகியோர் தலைமையில் மோடி அரசின் தேர்தல் பத்திர ஊழலிற்கு துணையாக அதன் தரவுகளை வெளியிட மறுக்கும் பாரத் ஸ்டேட் வங்கி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு மோடியைக் கண்டித்தும் வங்கி நிர்வாகத்தை கண்டித்தும் கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Tags:    

Similar News