பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கருங்கலில் பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் - எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

Update: 2024-03-08 09:07 GMT

ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கருங்கல் பாரத ஸ்டேட் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் பத்திர நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலை மார்ச் 6 ஆம் தேதி வெளியிடாமல் காலம் தாழ்த்தி பா.ஜ.க. வின் ஊழலுக்கு துணை போகிற பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமை வகித்தார். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம் எல் ஏ போராட்டத்தை துவக்கி வைத்தும், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முடித்து வைத்தும் கண்டன உரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், தமிழக காங்கிரஸ் பொதுசெயலாளர் ஆஸ்கர் பிரடி, கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் இராஜசேகரன், இனயம் புத்தன்துறை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஸ்டாலின், கீழ்குளம் பேரூர் காங்கிரஸ் தலைவர் ராஜகிளன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News