தமிழக மீனவர் நலனை காக்காத மத்திய அரசைக் கண்டித்து காங்., போராட்டம்

தமிழக மீனவர் நலனை காக்காத மத்திய அரசைக் கண்டித்து காங்., சார்பில் சீர்காழியில் ஆர்பாட்டம் நடந்தது.

Update: 2024-02-28 10:51 GMT

 தமிழக மீனவர் நலனை காக்காத மத்திய அரசைக் கண்டித்து காங்., சார்பில் சீர்காழியில் ஆர்பாட்டம் நடந்தது.  

சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகரத் தலைவர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கணிவண்ணன் கண்டன உரையாற்றினார். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன்பிடிக்கின்ற உரிமையையும் சீர்குலைக்கின்ற இலங்கை அரசின் அடாவடித்தனத்தை கண்டிக்க தவறிய மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News