இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 244 வீடுகள் கட்டுவதற்கான பணி துவக்கம்

குல்லூர் சந்தையில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 244 வீடுகள் கட்டுவதற்கான பணியினை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

Update: 2024-03-15 07:14 GMT

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குல்லூர் சந்தையில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் இலங்கை தமிழர்களுக்கு ரூ.14.06 கோடி மதிப்பில் இரண்டாம் கட்டமாக 244 வீடுகள் கட்டுவதற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
Tags:    

Similar News