சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தொடக்கம்

பொது சுத்திகரிப்பு நிலையம்

Update: 2023-12-30 09:15 GMT

பொது சுத்திகரிப்பு நிலையம்

ஈரோடு பெருந்துறை சிப்காட் வளாகத்தில் செயல்படும் தொழிற்சாலையில் இருந்து வெளியிடும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரால் குடிநீர் மற்றும் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர் .இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் அவ்வப்போது தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து விதிமுறைகளை மீறும் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டது. இதனையடுத்து பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News