சிவகாசி அருகே கட்டிட தொழிலாளி தூக்கிலிட்டு தற்கொலை !
சிவகாசி அருகே கட்டிட தொழிலாளி தூக்கிலிட்டு தற்கொலை.போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2024-06-19 12:16 GMT
சிவகாசி அருகே கட்டிட தொழிலாளி தூக்கிலிட்டு தற்கொலை.போலீஸ் விசாரணை... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி விஜயன் (34). இவரது மனைவி ஜெயபிரபா (25).இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
கணவன்,மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் அதிகாலை விஜயன் வீரசின்னம்மாள் கோவில் பக்கத்தில் உள்ள அரசமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.விஜயன் தற்கொலை குறித்து அவரது மனைவி ஜெயபிரபா திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார் உடலை கைப்பற்றிய திருத்தங்கல் போலீஸார் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.