வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம்.

Update: 2024-01-18 13:49 GMT

ஆலோசனை கூட்டம் 

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம். வேலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு அந்த முகாம்களில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து அளிக்கும் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன், தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் அளித்துள்ள மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் அதிகாரிகளை ஆட்சியர்கேட்டுக் கொண்டார்.

   இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, தனித்துனை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கலியமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர்கள் வெங்கட்ராமன், கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News