தேமுதிக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் தேமுதிக தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்தான ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-07 08:54 GMT
தேமுதிக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே அச்சரப்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தேமுதிக சார்பில் ஆலோசனை கூட்டம் அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் எம்.ராஜேந்திரன் கலந்து கொண்டு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் மற்றும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் அனைத்து கிளைகளிலும் கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், புதிய உறுப்பினர் சேர்த்தல், மகளிர் அணி பலப்படுத்துதல் மற்றும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். முன்னதாக தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ள தேமுதிக கொடி கம்பத்தில் தேமுதிக கொடியேற்றி வைத்து கேப்டன் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

மாவட்டத் துணைச் செயலாளர் சாந்தி, சசிகுமார் , அச்சரப்பாக்கம் பேரூர் கழக செயலாளர் பாரதி, அச்சரப்பாக்கம் ஒன்றிய அவைத் தலைவர் பெருமாள் , பொருளாளர் தங்கராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் தமிழ்குமரன், துரைராஜ், அச்சரப்பாக்கம் இளைஞரணி செயலாளர் முரளி, மற்றும் தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News