திமுக அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-02 12:59 GMT

தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம்.அமைச்சர்கள் பங்கேற்பு! திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் காணொளி மூலமாக நடந்தது. இதில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழ¬) நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை குறித்த கலந்தாலோசனை கூட்டம் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொளி காட்சி மூலமாக தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில் நடந்தது. இதில் சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. ஆலோசனை வழங்கினார்.இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். இதுபோல் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே செல்ல வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இருக்க வேண்டும். இதுபோல் இடையில் எந்த காரணத்தை கொண்டும் மையத்தை விட்டு வெளியே வரக்கூடாது என்பது உள்ளிட்ட அறிவரைகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News