வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு மீட்பு

கெங்கவல்லி அருகே வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2024-03-04 03:47 GMT
மீட்கப்பட்ட பாம்பு 
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு கெங்கவல்லி அருகே மேற்கு காடு பகுதியில் வசிப்பவர் செந்தாமரை. இவருடைய வீட்டில் நேற்று மாலை நல்ல பாம்பு ஒன்று இருப்பதை பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தார். பின்னர், கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததின் பெயரில் தீயணைப்பு நிலை அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் விரைந்து வந்த வீரர்கள் பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறை காப்பு காட்டில் விடப்பட்டன.
Tags:    

Similar News