கடையநல்லூரில் குடும்பத்துடன் காவலர்களின் தைப்பொங்கல் கொண்டாட்டம்

கடையநல்லூரில் குடும்பத்துடன் காவலர்கள் பொங்கல் கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-14 12:15 GMT

பொங்கல் விழா கொண்டாட்டம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா நேற்று இரவு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சொக்கம்பட்டி காவல் நிலைய வளாகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் பங்கேற்று பொங்கல் பானையில் புத்தரிசி இட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான காவல்துறையினர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News