கொத்தமல்லி இலை விலை சரிவு; விவசாயிகள் கவலை

ஆலங்குளம் அருகே கொத்தமல்லி இலை விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2024-06-13 03:45 GMT

ஆலங்குளம் அருகே கொத்தமல்லி இலை விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள பாவூர்சத்திரம் மொத்த காய்கறி விற்பனை சந்தைக்கு சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து மல்லி இலை வரத்து கடந்த இரண்டு தினங்களாக அதிகரித்துள்ளது. இதனால் இதன் விலை இன்று ஒரு கிலோ மல்லி இலை 50 ரூபாய் முதல் 70 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதன் விலை கிலோ ரூ.200 என உயர்ந்தது. இன்று விலை சரிந்ததால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதனால் அப்பகுதி மல்லி இலை விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
Tags:    

Similar News