குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

குடிநீர் திட்டப்பணிகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம், தலைமையிலான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் கற்பகம் முன்னிலையில் நடைபெற்றது.;

Update: 2024-05-08 15:36 GMT

ஆய்வு கூட்டம்

 பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளரும் தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்புஅலுவலருமான அனில் மேஷ்ராம் தலைமையில் ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் கற்பகம் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது,

Advertisement

இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் நகரப்பகுதிகள், ஊரகப்பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட குடிநீர் அளவு என்ன, தற்போது வழங்கிவரும் குடிநீர் அளவு என்ன, ஊரகப்பகுதிகள் மற்றம் நகரப்பகுதிகளில் எத்தனை நாளுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்தார். குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் தற்காலிகமாக லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும் அவ்வப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மேலும், குடிநீர் குழாய்களில் இருந்து சட்டவிரோதமாக நீரை எடுப்போர் குறித்து தகவல்கள் கிடைக்கப்பெற்றால் உடனடியாக அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் லோகநாதன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் வீரமலை, நகராட்சி ஆணையர் ராமர், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் சிவா, வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News