ஆத்தூரில் ரூ.46 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்.

ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த ஏலத்தில் ரூ.46 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.

Update: 2024-04-16 08:07 GMT

சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ஆத்தூர், தலைவாசல், கள்ளக்குறிச்சி பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 331 விவசாயிகள் 1,784 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஆத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை பகுதியைச் சேர்ந்த 17 வியாபாரிகள் பருத்தியின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்திருந்தனர்.

இந்நிலையில் பி.டி.ரகம் குவிண்டால் ரூ.7,159 முதல் ரூ.8,029 வரை, டி.சி.ஹெச்., ரக குவிண்டால் ரூ.8,789 முதல் 10,689 ரூபாய் வரை, கொட்டு பருத்தி (கழிவு) 3, 689முதல் 5, 968 வரை விற்பனையானது. மொத்தம் 1,784மூட்டை , 636.35 மொத்த குவிண்டால் பருத்தி ரூ 46 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வாரத்தைக் காட்டிலும் பருத்தி வரத்து சரிபாதியாக குறைந்து காணப்பட்ட நிலையில் தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News