சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சால்வை அணிவித்து மாணவிக்கு பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த ஒட்டன்சத்திரம் மாணவி காவியஸ்ரீயாவை சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் சால்வை அணிவித்தும், புத்தகம் வழங்கியும் பாராட்டினார்.

Update: 2024-05-11 09:14 GMT

மாணவிக்கு பாராட்டு 

ஓட்டன்சத்திரம் அருகேயுள்ள கொசவபட்டியில் அக்ஷயா அகடமி மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவி காவியஸ்ரீயா 500 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை புரிந்தார்.

இந்நிலையில் மாணவி காவியஸ்ரீயா அவரது பள்ளியின் தாளாளர் கா.மலர்விழிச்செல்வி மற்றும் பெற்றோருடன் திண்டுக்கல்லில் உள்ள சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவர்களை வரவேற்ற சிபிஎம் மாவட்டச்செயலாளரும் மக்களவை வேட்பாளருமான ஆர்.சச்சிதானந்தம் மாணவி காவியஸ்ரீயாவை வாழத்தி சால்வை அணிவித்து பாராட்டினார்.

இதனையடுத்து எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் எழுதிய இது யாருடைய வகுப்பறை என்ற புத்தகத்தையும் பரிசாக வழங்கி கௌரவித்தார்.

Tags:    

Similar News