வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு  சிபிஎம் நிவாரண உதவி வழங்கல்

வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு  சிபிஎம் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

Update: 2023-12-21 16:08 GMT
நல உதவி வழங்கிய மார்க்சிஸ்ட் கட்சி.

கன்னியாகுமரி அருகில் உள்ள கோவளத்தில் பள்ளமான பகுதியில் தேங்கிய பெருவெள்ளம் 48 வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பாம்புகளும் விஷப்பூச்சிகளும் சூழ்ந்து சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட  மக்ககளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிவாரண உதவிகள் நேற்று  வழங்கப்பட்டது.   

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி உள்பட பலர் பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு நல உதவிகள் வழங்கினர்.

Tags:    

Similar News