ஓய்வு பெற்ற  இன்ஸ்பெக்டர் மீது பட்டாசு வீச்சு

பணியில் இருக்கும் போது வழக்குப்பதிவு செய்த ஒய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் மீது அணுகுண்டு பட்டாசை வீசிய சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-12-28 07:43 GMT

பைல் படம் 

குமரி மாவட்டம்  நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் உள்ள ஒரு மரக்கடையில் நேற்று மாலையில் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரும், அவரது நண்பர் ஒருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த வாலிபர் ஒருவர் கடைக்குள் இருந்த ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரை ஆபாசமாக திட்டி விட்டு, திடீரென அணுகுண்டு பட்டாசை பற்ற வைத்து இன்ஸ்பெக்டர் மீது வீசினார்.

இந்த பட்டாசு சற்று தொலைவில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது.  இதனால் அந்த முன்னாள் இன்ஸ்பெக்டர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.  ஆனால் அந்த வாலிபர் தப்பி ஓடினார்.     இது குறித்து வடசேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பட்டாசு வீசிய நபர், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த வருண் (42) என்பது தெரிய வந்தது. இன்ஸ்பெக்டர் பணியில் இருந்த போது வருண் மீது வழக்கு பதிவு செய்ததால் ஆத்திரத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வருண் மீது சிறு, சிறு அடிதடி வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News