முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு

கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அண்ணா பல்கலைக் கழகத்தில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Update: 2024-04-11 14:20 GMT

விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் உரை

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-னை முன்னிட்டு பண்ருட்டி அண்ணா பல்கலைக் கழகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் அண்ணா பல்கலைகழகம் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் விழிப்புணர்வு உரையாற்றினார்.

உடன் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் முனைவர். இரா. அன்பரசி, பொறியியல் கல்லூரி முதன்மையர் முனைவர். சி. முத்துக்குமரன் மற்றும் பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Tags:    

Similar News