கன்னியாகுமரியில் மக்கள் கூட்டம் அலைமோதல்

தொடர் விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

Update: 2024-01-29 01:32 GMT
கன்னியாகுமரியில் பயணிகள்
கன்னியாகுமரியில் தொடர் விடுமுறையை முன்னிட்டு கடற்கரையில் சுற்றுலா பயணிகள் ஏராளம் பேர் காலை முதல் குவிந்தனர். காலையில் சூரிய உதயம் காணவும்,  கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளூர் சிலையை படகில் சென்று பார்வையிட இன்று காலை முதலே அங்கு மக்கள் குவிந்தனர். சூரிய உதயத்தை பார்த்த ரசித்த மக்கள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு படகில் செல்வதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் எடுப்பதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.  கடந்த நான்கு நாட்கள் தொடர்  விடுமுறை என்பதால் இன்று நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமை பயணிகள் கூட்டம் களை கட்டியது.
Tags:    

Similar News