கடலூர் : சமுதாய வளைகாப்பு - கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை

Update: 2023-11-30 01:05 GMT
கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசை
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கர்ப்பிணி பெண்களுக்கு சீரவரிசைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன், சிதம்பரம் சார் ஆட்சியர் சுவேதா சுமன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News