கடலூர் துணை மேயர் மனு அளிப்பு

கடலூர் துணை மேயர் மனு அளித்தார்.

Update: 2024-07-04 15:18 GMT

மனு அளித்த துணை மேயர்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் மனு கொடுத்தார். இந்த மனுவில் கடலூர் தந்தை பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது .

கடந்த 50 ஆண்டுகளாக கடலூர் மாநகரத்தில் ஒரே கலைக் கல்லூரி தான் உள்ளது. மாணவர்கள் சேர்க்கை வீதம் தற்போது அதிகமாக உள்ளதால் கல்லூரியில் உள்ள இடங்களை குறைந்தபட்சம் 50 சதவீதம் உயர்த்த வேண்டும் கல்லூரியில் இடம் கிடைக்காமல் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே கணம் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் கடலூர் தந்தை பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்க விகிதத்தை அதிகரித்து தருமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த மனுவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டு உடனடியாக இதனை பரிசினை செய்வதாக உறுதி கூறியுள்ளார்.

Tags:    

Similar News