கடன் பணத்தை கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கடன் பணத்தை கேட்டவருக்கு அரிவாள் வெட்டு. போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-01-19 07:25 GMT

கடன் பணத்தை கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள சிறுகுடி தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் பொன்னர்(41). இவர் அதேபகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இவரிடம் முத்துக்குமார் (23) என்பவருக்கு வட்டிக்கு பணம் வாங்கி ரூ.10 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும் பொன்னரின் உணவகத்தில் முத்துக்குமார் ரூ.2000 வரை உணவு சாப்பிட்டுள்ளார். அந்த பணத்தையும் தருவதாக கடன்  சொல்லி சென்றுள்ளார். நீண்ட நாட்களாக பணத்தை திருப்பிதராததால் பொன்னர் அவரிடம் கேட்டுள்ளார். 2 நாட்களில் தருவதாக உறுதி அளித்த முத்துக்குமார் பணத்தை தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது ஆத்திரமடைந்த முத்துக்குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பொன்னரை தலை, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News