சூறைக்காற்றில் வாழை மரங்கள் சேதம்

செட்டிப்பட்டி கிராமத்தில் நேற்று மாலை வீசிய பலத்த சூரைக்காற்றில் ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து சேதமடைந்தது.

Update: 2024-05-12 05:08 GMT

வாழை மரம் சேதம்

விருதுநகர் அருகே செட்டிபட்டி கிராமத்தில் பால்ச்சாமி என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. விவசாய நிலத்தில் கொடிக்காய், வாழைமரங்கள் உள்ளிட்ட செடிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார் இந்த நிலையில் சுமார் 1 லட்சத்தி 50 ஆயிரம் செலவு செய்து ஒரு ஏக்கர் பரப்பளவில் சுமார் 1200க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நட்டு விவசாயம் செய்து வந்துள்ளார்.

வாழை மரம் குழை தள்ளும் நேரத்தில் நேற்று மாலை வீசிய பலத்த சூறைக்காற்றில் சுமார் 600க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும், இதனால் தனக்கு ரூ 3 லட்சம் வரை நஷ்டமடைந்திருப்பதாகவும், ஆகையால் இதை நம்பி இருந்த தங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம், பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், ஆகையினால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சேதமடைந்த வாழைக்கன்றுகளை ஆய்வு செய்து தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தாள்ளார்.

Tags:    

Similar News