ஆறுமுகநேரி அருகே வெள்ளத்தில் நெற்பயிர்கள் சேதம்; விவசாயி தற்கொலை
ஆறுமுகநேரி அருகே வெள்ளத்தில் நெற்பயிர்கள் சேதம் அடைந்ததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். ;
By : King 24X7 News (B)
Update: 2024-01-19 16:13 GMT
கோப்பு படம்
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி அருகேயுள்ள அம்மன்புரம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் மூக்காண்டி மகன் பாஸ்கரன் (51), விவசாயி. இவர் தனது 5 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தாராம். சமீபத்தில் பெய்த அதிகனமழை வெள்ளம் காரணமாக நெற்பயிர்கள் சேதம் ஆனது.
இதனால் மனவேதனையில் இருந்த அவர் நேற்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.