மாத்தி நாயக்கன்பட்டி செல்லும் தரைப்பாலம் சேதம்

மாத்தி நாயக்கன்பட்டி செல்லும் தரைப்பாலம் சேதமடைந்துள்ளது.

Update: 2023-12-08 09:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே குல்லூர்சந்தை கிராமத்தில் உள்ள அணை கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பியது. அணை நிரம்பியதால் அணையில் இருந்து வெளியேறிய உபரி நீர் முழுவதும் குல்லூர்சந்தையில் இருந்து மாத்திநாயக்கன்பட்டி செல்லும் பாதையில் உள்ள தரைப்பாலம் வழியாக காட்டாற்று வெள்ளம் போல் பயந்து ஓடியது. வெள்ளம் போல் ஓடிய மழைநீர் காரணமாக தரைப்பாலம் தாங்காமல் உடைந்து சேதமடைந்தது.

இந்த தரைப்பாலம் வழியாகத்தான் குல்லூர்சந்தை கிராமத்தில் இருந்து மாத்தி நாயக்கன்பட்டி, சூலக்கரை மற்றும் விருதுநகருக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. மேலும் திருச்சுழி அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செல்லும் காவலர்கள், பொதுமக்கள் இந்த பாதையை தான் பயன்படுத்துகின்றனர். தற்போது இந்த தரைப்பாலம் சேதமடைந்து காணப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பாதையில் அதிக அளவு இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே ஏதேனும் விபத்து ஏற்படும் முன் சேதம் அடைந்த இந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News