மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு தருமபுர ஆதீனம் சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில், வதானேஸ்வரர் ஆயலங்களில் தருமை ஆதீனம் மார்கழி மாத புறப்பு சிறப்பு வழிபாடு

Update: 2023-12-17 12:08 GMT

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு தருமபுர ஆதீனம் சிறப்பு வழிபாடு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின், 27வது சன்னிதானம், மாசிலாமணி சுவாமிகள், தனுர் மாதமான மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு மாதத்தின் 30 நாட்களும் சைவ திருக்கோயில்களில் வழிபாடு நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். , தனுர் மாதப் பிறப்பான இன்று மயிலாடுதுறையில் ,அமைந்துள்ள பழமை வாய்ந்த, அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோயிலில், தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம், சிறப்பு வழிபாடு நடத்தினார். அதே போன்று வதானேஸ்வரர் உடனாகிய ஞானாம்பிகை ஆலயத்திற்கு சென்று சுவாமி அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினார். முன்னதாக இரண்டு கோயில்களிலும் ஆதீனத்திற்க தருமபுரம் ஆதீன கட்டளை தப்பிரான்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
Tags:    

Similar News