மாற்றுத்திறனாளிகள் தினம் - ஊதா நிறத்தில் ஒளிர்ந்த ஆட்சியர் அலுவலகம்

Update: 2023-12-03 07:33 GMT

ஊதா நிற பேட்ஜ்கள் வழங்கல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சியில் -மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகம் முழுவதும் ஊதா நிற மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இரவில் ஊதா நிறத்தில் ஒளிர்ந்தது. டிச.2 ம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் நேற்று இரவு முதல், வரும் திங்கள் இரவு வரை, ஊதா நிற விளங்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிர்ந்து வருகிறது.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) யோகஜோதி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணியிடம் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்திற்கான ஊதா நிற பேட்ஜ்களை வழங்கினார்.
Tags:    

Similar News